1647. | கஞ்சுகி மாந்தருங் காவல் முதியாரும் மஞ்சிவர் சாரல் மணியறையும் வார்பொதும்பும் 1துஞ்சு மழைதவழுஞ் சோலைகளுஞ் 2சோதித்துச் செஞ்சொ லவர்போய்த் திசைகாவல் கொண்டாரே. | (இ - ள்.) கஞ்சுகி மாந்தரும் - மெய்ப்பை புக்க ஏவலரும், காவல் முதியாரும் - காவற்றொழில் பூண்ட முதுமையாளரும், மஞ்சு இவர் சாரல் - முகில் தவழும் தாழ்வரைகளையும், மணியறையும் - மணிகளானியன்ற உச்சியினையும், வார்பொதும்பும் - நீண்ட குறுங்காடுகளையும், துஞ்சு மழை தவழும் - தங்கிய முகில்கள் தவழாநின்ற, சோலைகளும் - பொழிலிடங் களையும், சோதித்து - ஆராய்ந்து, செஞ்சொலவர்போய் - செவ்விய சொல்லையுடைய அம்மாந்தர்கள் சென்று, திசைகாவல் கொண்டாரே - திக்கு களிடத்தே காவற்றொழிலை மேற்கொள்வாராயினர், (எ - று.) அப்பொழிலைக் காக்கும் காவலர், மணியறையும், பொதும்பும், சோலைகளும் சோதித்துப் போய்த் திசைகளிலே காவலாக அமைந்தனர், என்க. | (517) | | |
|
|