இதுவுமது | 1656. | விண்டு சுடர்தயங்கு மேதகுமா மாணிக்கம் கண்டு கவின்விரிந்த காயாந் துணரிவை கொண்டு குழற்கணிது மென்று கொளலுறுவார் வண்டு வழிபடர வாட்கண் புதைத்தியல்வார். | (இ - ள்.) விண்டுசுடர் தயங்கு மேதகு மாணிக்கம் கண்டு - வெளிப் பட்டு ஒளிதிகழ்கின்ற மேன்மைமிக்க மாணிக்கமணியினைப் பார்த்து, கவின் விரிந்த காயாந்துணர் - அழகு விரிந்த காயாவின் பூங்கொத்துக்கள் என்று கருதி, இவைகொண்டு குழற்கு அணிதும் என்று - இவையிற்றைக் கொய்து எம் கூந்தலிலே சூடுவேம் என்று எண்ணி, கொளல் உறுவார் - அவையிற்றைக் கொய்பவர், வண்டு வழிபடர - முன்னரே அவையிற்றை அவ்வாறு கருதி ஆண்டு மொய்த்துள்ள வண்டுகள் அவையிற்றைவிட்டு அம்மகளிர் கண்களை மலராகக் கருதிவீழாநிற்ப, வாட்கண் புதைத்து - தம் வாள்போன்ற கண்களைத் தம் கையால் புதைத்தனராய், இயல்வார் - புறம்போகா நிற்பர், (எ - று.) மாணிக்கச் சுடர்கண்டு, இவை காயாவின் பூந்துணர் என்று, கொய்து சூட்டக் கை நீட்டியவழி, அவற்றில் மொய்த்த வண்டு தேவியர் கண்ணை மலரெனக் கருதி வந்து வீழ்தலாலே, வாட்கண் புதைத்தனராய்ப் புறம் போவார், என்க. | (526) | | |
|
|