அம்மனையும் வள்ளையும் ஆடுதல் | 1659. | பைம்பொ 1னறைமேற் பவழ முரலாக வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி அம்பொன் மலைசிலம்ப வம்மனை 2வள்ளையு கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார். | (இ - ள்.) பைம்பொன் அறைமேல் - பசிய அப்பொன் பாறையின் மேலே, பவழம் உரலாக - பவழத்தாலியன்ற உரலிலே, வம்ப மணி பெய்து - புதிய மணிகளைச் செந்நெலாகப் பெய்து, வான் கேழ் மருப்பு ஓச்சி - தூய வெண்ணிறமமைந்த யானைக் கோடாகிய உலக்கைகளாலே குற்று, அம்பொன் மலை சிலம்ப - அழகிய அப்பொன்மலை எதிரொலி எடுப்ப, அம்மனை வள்ளையுடன் அம்மனைப்பாடலும் வள்ளைப்பாடலும், கம்பஞ் செங் யானை கரியவனை - பகைவரை நடுக்கஞ்செய்யும் யானை போல்வானாகிய திவிட்டநம்பியை, பாடினார் - ஏத்திப் பாடலானார்கள், (எ - று.) அம்மனை - அம்மனை எறிந்து மகளிர் ஆடும் ஆடல், வள்ளைப்பாட்டு - உலக்கைப் பாட்டு. அங்ஙனம் சென்ற தேவியர் பவழ உரலிலே மணி அரிசி பெய்து மருப்புலக்கை ஓச்சிக் கரியவனாகிய நம்பியை அம்மனைப் பாட்டினும் வள்ளைப் பாட்டினும் புகழ்ந்து பாடுவாராயினர் என்க. | (529) | | |
|
|