அம்மனையும் வள்ளையும் ஆடுதல்

1659. பைம்பொ 1னறைமேற் பவழ முரலாக
வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி
அம்பொன் மலைசிலம்ப வம்மனை 2வள்ளையு
கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார்.
     (இ - ள்.) பைம்பொன் அறைமேல் - பசிய அப்பொன் பாறையின் மேலே, பவழம்
உரலாக - பவழத்தாலியன்ற உரலிலே, வம்ப மணி பெய்து - புதிய மணிகளைச் செந்நெலாகப் பெய்து, வான் கேழ் மருப்பு ஓச்சி - தூய வெண்ணிறமமைந்த யானைக்
கோடாகிய உலக்கைகளாலே குற்று, அம்பொன் மலை சிலம்ப - அழகிய அப்பொன்மலை
எதிரொலி எடுப்ப, அம்மனை வள்ளையுடன் அம்மனைப்பாடலும் வள்ளைப்பாடலும்,
கம்பஞ் செங் யானை கரியவனை - பகைவரை நடுக்கஞ்செய்யும் யானை போல்வானாகிய
திவிட்டநம்பியை, பாடினார் - ஏத்திப் பாடலானார்கள், (எ - று.)

     அம்மனை - அம்மனை எறிந்து மகளிர் ஆடும் ஆடல், வள்ளைப்பாட்டு -
உலக்கைப் பாட்டு.

     அங்ஙனம் சென்ற தேவியர் பவழ உரலிலே மணி அரிசி பெய்து மருப்புலக்கை
ஓச்சிக் கரியவனாகிய நம்பியை அம்மனைப் பாட்டினும் வள்ளைப் பாட்டினும் புகழ்ந்து
பாடுவாராயினர் என்க.

(529)