1661. வலம்ரிவாய் வைத்தான் வார்சிலைகைக் கொண்டான் *
சலம்புரி சண்டை தலைபனிப்புக் கண்டான்
பொலம்புரி 2தாமரையாள் பொன்னாகந் தோய்ந்தான்
கலம்புரி வண்டடக்கைக் கார்மேக வண்ணனே.
     (இ - ள்.) வலம்புரி வாய் வைத்தான் - வலம்புரியாகிய பாஞ்ச சந்நியத்தைத்
திருவாய்மலரிலே வைத்து முழக்கினான், வார்சிலை கைக்கொண்டான் - நெடிய
சார்ங்கமென்னும் வில்லைக் கையிலே பற்றினான், அவ்வளவானே, சலம்புரி சண்டை -
பகைவருடைய வஞ்சகமிக்க போர்த் தொழிலிலே, தலை பனிப்புக் கண்டான் - அவர் தம்
தலைகள் அச்சத்தாலே நடுங்கியதனைப் பார்த்தான்,

     பொலம்புரி தாமரையான் - பொற்றாமரை மலரிலே வீற்றிருப்பவளாகிய திருமகளின்,
பொன் ஆகம் தோய்ந்தான் - அழகியதிருமேனியைத் தழீஇயினான், (அவன் யார் எனில்)
கலம்புரி வள்தடக்கை - அருங்கலங்களையுடைய வள்ளன்மைமிக்க பெரிய
கையினையுடைய, கார்மேக வண்ணனே - கரிய முகில் நிறமுடையோனாகிய நம் தலைவன்
திவிட்ட நம்பியே ஆவன், (எ - று.)

வலம்புரி முழக்கினான்; சிலைகைக் கொண்டான், அத்துணையானே சண்டை
தலைபனிப்புக் கண்டான், பொன்னகந் தோய்ந்தான்; அவன் யாரெனில், கார்மேகவண்ணன்
என்றாள் என்க.

(531)