ஞாயிறு உச்சியை அடைதல்

1668. மங்கையர் தம்மை யெல்லா
     மணிவண்ணன் மருட்டி மற்றிக்
கொங்கவிழ் குளிர்கொள் சோலைக்
     1குன்றினின் றிழிந்த போது
வெங்கதிர் விரிந்த வெய்யோன்
     விசும்பிடை 1வெதும்பி வேவச்
செங்கதிர்க் கூடங் குத்திச்
     2செந்நடு வாக நின்றான்.
     (இ - ள்.) மங்கையர் தம்மையெல்லாம் - தன் தேவியராய அம்மகளிரையெல்லாம்,
மணிவண்ணன் - திவிட்டன், மருட்டி - இவ்வாறு அச்சுறுத்தி, மற்றுஇக் கொங்கு அவிழ்
குளிர்கொள் சோலை - இந்த மணங்கமழும் குளிர்ந்த சோலைசூழ்ந்த, குன்றினின்று
இழிந்தபோது - செய்குன்றிலிருந்து இயங்கியபொழுது, வெங்கதிர் விரிந்த வெய்யோன் -
வெவ்விய கதிரை விரித்த கதிரவன், விசும்பு இடைவெதும்பி வேவ - விண் தன்
இடமெல்லாம் வெப்பமுற்று வேகும்படி, செங்கதிர்க்கூடம் குத்தி - தனது செவ்விய கதிராலே
கூடாரம் அடித்து, செந்நடுவாக நின்றான் - அவ்விசும்பின் செவ்விதாய உச்சியிலே
நிற்பானாயினன், (எ - று)

     செந்நடு - சரியான நடுவிடம்.

     நம்பி யானையாலே தேவியரை மருட்டிக் குன்றினின் றிழிந்தபோது ஞாயிறு
உச்சியிலே நின்றான் என்க. கூடம் - சம்மட்டி.

(538)