1678. | வென்றனம் வீரன் றன்னை வீக்குமின் சிவிறித் தாரை சென்றெனச் சிறந்த காதற் றேவியர் திளைக்கும் போழ்தில் ஒன்றிய வுழையர் கீழ்நீ 3ரோப்பறித் திடுத லோடு நின்றகஞ் சுழிந்த தெண்ணீர் நெரேலென விழிந்த தன்றே. | (இ - ள்.) வென்றனம் வீரன்றன்னை - வீரனாகிய நம்பியை யாம் வென்றுவிட்டேம், வீக்குமின் சிவிறித்தாரை சென்று என - விடாதே துருத்தி நீர்த்தாரையை வீசுங்கோள் அணுகி நின்று என்று, சிறந்த காதல் தேவியர் - சிறந்த தலையன்புடைய தேவிமார்கள், திளைக்கும் போழ்தில் - திவிட்ட நம்பியை நெருக்கிய அமயத்தே, ஒன்றிய உழையர் - நம்பியின் ஏவலிலே பொருந்திய பணியாளர், கீழ்நீர் ஓ பறித்திடுதலோடும் - அவ்வாவியின் கீழே உள்ள நீரை மதகின் பலகையை அகற்றி ஓடிவிடும்படி செய்தனராக அங்ஙனம் செய்தவுடனே, நின்று அகம் சுழிந்த தெண்ணீர் - அவ்வாவியில் நிலைத்து நின்று உள்ளே சுழித்திட்ட தெளிந்த நீர், நெரேல் என - பொள்ளென, இழிந்தது - வடிந்தொழிந்தது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) ஓ - ஓரெழுத் தொருமொழி - மதகிலிட்டு நீரைத் தேக்குதற்குரிய பலகையின் பெயர். பறித்தல் - உருவி எடுத்தல் - நீரைத்தேக்கும் போது செருகியும் வடியச் செய்யும்பொழுது உருவியும் விடுதல் வழக்கம். ஆகலின், ஓப்பறித்திடுதலோடும் என்றார். நெரேல், என்பது ஈண்டு விரைவு குறித்து வந்தவொரு குறிப்புச் சொல். | (548) | | |
|
|