1691. கண்ணகங் குளிர்ப்பக்கல் லாரக் கற்றையும்
தண்ணறு 3ங் குவளைதா மெறித்த தாமமும்
ஒண்ணிறத் தாமரை யொலிய லுந்தழீஇ
எண்ணரும் பெருங்கவி னிளைய ரெய்தினார்.
     (இ - ள்.) இளையர் - இளமைப்பருவம் உடைய தேவிமார், கண் அகம் குளிர்ப்ப -
நம்பியின் கட்பொறி இன்புறுமாறு, கல்லாரக்கற்றையும் - நீர்க்குளிரியாலாய
பூங்கற்றைகளையும், தண்நறும் குவளைதாம் எறித்த தாமமும் - குளிர்ந்த நறுமணங்கமழும்
செங்கழுநீர் மலராலாய ஒளிமிக்க மாலைகளையும், ஒண்ணிறத் தாமரை ஒலியலும் -
ஒள்ளிய நிறமமைந்த தாமரை மலராலியன்ற தொடையல்களையும், தழீஇ -
அணிந்துகொண்டு,  எண்ணரும்  பெருங்கவின்  எய்தினார் - நினைத்தற்கும்  அரிய
பேரழகுடையர்  ஆயினார், (எ - று.)

     கல்லாரம் - நீர்க்குளிரி என்னும் ஒரு நீர்ப்பூ, (பிங்கல, 303) அஃது இக்காலத்தே
துளிரி என்ற வழங்கப்படுகின்றது.இளமைமிக்க தேவியர் கல்லாரக் கற்றையும் குவளைத்தாமமும் தாமரை ஓலியலும் தழீஇக் கருதற்கியலாக் கவினுடன் திகழ்ந்தனர் என்க.

 (561)