lதிங்கள் மறைதலும் ஞாயிறு தோன்றுதலும்

1709. கங்குல்வாய் மடந்தை கண்ட
     கனவுமெய் யாகல் வேண்டி
மங்குல்வா னகட்டுச் சென்று
     மதியவன் மறைந்த பின்னை
அங்குலா யிருளை நீக்கு
     1மாயிரங் கதிரி னானும்
கொங்குலாங் குழலி காணுங்
     குழவிய துருவங் கொண்டான்.
     (இ - ள்.) கங்குல்வாய் மடந்தை கண்ட - அவ்விரவிலே கோப்பெருந் தேவி கண்ட,
கனவு மெய்யாகல் வேண்டி - கனா நனவாகும் பொருட்டு, மங்குல்வான் அகட்டுச் சென்று -
இருண்ட விசும்பின் நடுவே போய், மதியவன் மறைந்த பின்னை - திங்கள் மறைந்த
பின்னர், அங்கு உலாம் இருளை நீக்கும் - அவ்விசும்பிடத்தே பரவிய இருளை அகற்றா
நின்ற, ஆயிரம் கதிரினானும் - ஆயிரம் சுடர்களையுடைய ஞாயிறும், கொங்கு உலாம்
குழலி காணும் குழவியது - மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய தேவி கனவுகண்டதின்
பயனாய் இனித் தோன்ற நிற்கும், மகவினுடைய, உருவம் கொண்டான் - உருவத்தைத்
தேவிக்குக் காட்டுவான் போன்று எழில் மிக்க வடிவுடன் தோன்றுவானாயினன், (எ - று.)

     நங்கை கண்ட கனாவை உண்மையே ஆக்குவான் போன்று திங்கள் மறைந்துவிட
நங்கையின் வயிற்றிற் பட்ட மகவின் எழில் இற்றெனக் காட்டுவான் போன்று ஞாயிறு
தோன்றினன் என்க.

(579)