சுயம்பிரபை கருவுயிர்த்தல் | 1712. | கோணலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத் தோணலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன் கேணலம் பொலிதரக் கிளருஞ் சோதிய நாணலம் பொலிதர நம்பி தோன்றினான். | (இ - ள்.) கோள் நலம் பொலிந்து - ஞாயிறே முதலிய கோள்கள் நன்னிலையிலே நின்று விளங்கவும், விண் குளிர - வானவர் மகிழவும், கிளரும் சோதி அம் நாள் நலம் பொலிதர - திகழாநின்ற சோதி என்னும் அழகிய விண்மீனுக்குரிய நன்மை சிறப்புற் றமையா நிற்பவும், குங்குமத்தோள் நலம் பொலிந்தது ஓர் - குங்குமச் சாந்தணிந்த தோளினது நன்மையாகிய பேராற்றலாலே திகழ்வதொரு, தோன்றலோடு - திவிட்ட நம்பியோடு, தன் கேள் நலம் பொலிதர - தன்னுடைய பிற கேளிர்களும் நன்மையாலே விளங்கா நிற்பவும், நம்பி தோன்றினான் - மகன் பிறந்தனன், (எ - று.) ஞாயிறே முதலிய கோள்கள் தாம் நிற்கும் இடங்களால் நன்மை மிகுவனவாக விண்குளிரச் சோதி மீனுக்குரிய நாளிலே, திவிட்டனோடு தன் சுற்றத்தாரும் நன்மையடையும்படி நம்பி தோன்றினான் என்க. நம்பி ஈண்டு ஆண்மகவு என்னு மாத்திரையாய் நின்றது. | (582) | | |
|
|