இதுவுமது | 1715. | தொத்திளங் கடிமலர் துதைந்த கோதையார் மொய்த்திளங் குமரரோ டாடு முன்கடை மத்தளப் பாணியு மதன கீதமும் கைத்தலத் தாளமுங் கலந்தி சைத்தவே. | (இ - ள்.) தொத்து இளம் கடிமலர் துதைந்த கோதையார் - கொத்தாகிய இளமையுடைய மணமிக்க மலர்கள் செறிந்த மாலையை அணிந்த விறலியர், இளங்குமரரோடு - இளமையுடைய கூத்தரோடே, மொய்த்து - நெருங்கி, ஆடும் முன்கடை - கூத்தாடாநின்ற தலைவாயிலின் கண், மத்தளப்பாணியும் - முழவினது இன்னிசையும், மதன கீதமும் - காமச்சுவை கவினிய இயைப் பாடலும், கைத்தலத் தாளமும் - கைகளாலே ஒற்றும் தாள ஓசையும், கலந்து இசைத்தவே - கூடி முழங்கின, (எ - று.) நம்பி பிறந்தமை கருதி மகிழ்ந்த நகரத்தே விறலியரும் கூத்தரும் ஆடுதலாலே மத்தள முழக்கமும் காமப்பாடலும் கைத்தலத்தாளமும் கலந்து இசைத்த என்க. | (585) | | |
|
|