தூதன் சோதிமாலைக்கு மகப் பிறந்தமை கூறல் | 1728. | எங்கள்கோ னெறிகதிர்ப் பெயர னீர்மலர்க் கொங்குசே ரலங்கலான் குளிரத் தங்கினாள் மங்குறோய் மணிவரை மன்னன் றன்மகள் தொங்கல்சூழ் சுரிகுழற் சோதி மாலையே. | இதுமுதல் 9 செய்யுள் ஒரு தொடர் (இ - ள்.) மங்குல்தோய் மணிவரை மன்னன் தன் மகள் - முகில்கள் பொருந்திய அழகிய வடமலையின்கண் உள்ள சுரேந்திரகாந்த நகரத்து அரசனுடைய மகளாகிய, தொங்கல் சூழ் சுரிகுழல் சோதிமாலை - மலர்மாலைகள் சுற்றப்பட்ட சுரிந்த கூந்தலையுடைய சோதிமாலை என்னும் அரசிளஞ் செல்வி, எங்கள் கோன் - எம் அரசனாகிய, எறிகதிர்ப் பெயரன் - அருக்ககீர்த்தி என்னும், பெயரையுடைய கொங்குசேர் அலங்கலான் - மணந் தங்கிய மலர் மாலையையுடையோன், குளிர - மனமகிழும்படி, தங்கினாள் - அவனுடன் உறைந்தாளாக, (எ - று.) எம்மரசனாகிய அருக்ககீர்த்தி சுரேந்திரகாந்தத்து மன்னன் மகளாகிய சோதிமாலை என்பாளாகிய தன் மனைவியோடே மகிழ்ந்துறைந்தானாக என்றபடி. | (598) | | |
|
|