சோதிமாலை கருவுயிர்த்தல்

1732. மாணிக்க மரும்பிய வண்பொன் மாநிலத்
தாணிப்பொன் னனையவ ளனைய ளாயபின்
கோணிற்கும் விசும்பிடைக் குழவித் திங்களும்
நாணிப்போ முருவொடு நம்பி தோன்றினான்.
       (இ - ள்.) மாணிக்கம் அரும்பிய - மாணிக்கம் என்னும் மணிகள் ஒளிவிடுகின்ற,
வண்பொன் மாநிலத்து - வளவிய பொன்மயமான மலை நிலத்திலே, ஆணிப்பொன்
அனையவள் - மாற்றுயர்ந்த பொன்னை நிகர்த்த சோதிமாலை, அனையள் ஆயபின் -
அவ்வாறாயின பின்னர், கோள்நிற்கும் விசும்பிடை - கோள்கள் உளவாகிய வானிடத்தே,
குழவித் திங்களும் - இளந் திங்களும், நாணிப்போம் உருவொடு - நாணுதற்குரிய
பேரொளியோடே, நம்பி தோன்றினான் - திருமகன் பிறந்தனன், (எ - று.)

     ஆணிப் பொன் - உறையிடப்பட்ட பொன், ஆணி - கட்டளை.

     குழவித் திங்கள் என்றது - குழவிஞாயிறு என்றாற் போன்று கீழ்த் திசையிலே
தோன்றும் முழுத்திங்களை என்க; பிறையை யன்று.

     சோதிமாலைக்குத் திங்களும் நாணும் எழிலுடன் நம்பி தோன்றினான் என்க.

(602)