அம் மகவின் மாண்பு

1733. தேமரு செங்கழு நீரின் செவ்விதழ்
காமரு பவழவாய் கமழுங் கண்மலர்
தாமரை யகவிதழ் புரையுந் தானுமோர்
பூமரு தமனியக் குழவி போலுமே.
     (இ - ள்.) தேம் மரு செங்கழுநீரின் - தேன் பொருந்திய செங்கழுநீர் மலர்போன்ற,
செவ்விதழ் - செவ்விய உதடுகளையும், காமரு பவழவாய் - விரும்புதற்குரிய பவழம்
போன்ற திருவாயினையும், தாமரை அக இதழ் புரையும் கமழும் கண்மலர் - தாமரையினது
அகவி தழை நிகர்த்த மணமுடைய கண்களாகிய மலரையும் உடைய, தானும் -
அக்குழவிதானும், ஓர் பூமரு தமனியக்குழவி போலுமே - ஒப்பற்ற அழகிய பொன்
மகவுபோன்று திகழ்ந்தது, (எ - று.)

     அம்மகவு செங்கழுநீர் மலர்போன்ற செவ்விதழும் பவழவாயும் தாமரைபுரையும்
கண்ணும் உடையதாய்த் தமனியக் குழவி போலும் என்க.

(603)