அப்பொழுது நிகழ்ந்த ஆரவாரம் | 1734. | வானிடை மணிவிளக் கெரிந்த வண்டொடு தேனுடை மலர்மழை சிதர்ந்த தவ்வழி மீனுடை விரிதிரை வெண்சங் கார்த்தன தானுடை யொளிதிசை தவழ்ந்தெ ழுந்ததே. | (இ - ள்.) வானிடை மணிவிளக்கு எரிந்த - வானிடத்தே மணிகளாகிய விளக்குகள் ஒளிர்ந்தன, வண்டொடு தேனுடை மலர்மழை சிதர்ந்தது - வண்டுகளோடே தேன் மிக்க மலர்மாரி பொழிந்தது, அவ்வழி - அப்போது, மீன்உடை விரிதிரை வெண்சங்கு ஆர்த்தன - மீன்களை உடைய விரிந்த கடலிலே தோன்றிய வெளிய சங்குகள் முழங்கின, தானுடை ஒளி திசை தவழ்ந்து எழுந்தது - அக்குழவியின் திருமேனி ஒளி திசைகளிலே பரவி எழுந்தது, (எ - று.) அக்குழவி தோன்றிய பொழுது, வானிடத்தே மணிவிளக்கு எரிந்தன; மலர்மழை பொழிந்தது; சங்குகள் முழங்கின;அக்குழவியின் திருமேனி ஒளி திசைகளிலேபரவிற்றென்க. | (604) | | |
|
|