இதுவுமது | 1752. | கரிய குழலும் பொற்றோடுஞ் செய்ய வாயுங் 3கதிர் முறுவல் மரிய திசையு மதிமயங்கு 4மம்பொன் முகத்து மடவார்கள் திரியத் தம்மைப் புடைத்தாலுஞ் சென்று சேர்ந்து திளைக்குமால் அரிய செய்யுங் காமுகர்போ லளிய வந்தோ வடங்காவே. | (இ - ள்.) கரிய குழலும் - கரிய கூந்தலும், பொற்றோடும் - பொன்னாலியன்ற தோடுகளும், செய்ய வாயும் - சிவந்த வாயும், கதிர்முறுவல் - ஒளியுடைய புன்முறுவலும் உடைய, மதிமயங்கும் - திங்களைப்போன்ற, அம்பொன் முகத்து - அழகிய பொன்னிறமமைந்த முகத்தையுடைய, மடவார்கள் - அம்மகளிர்கள், மரிய - பொருந்திய, திசையும் திரிய - திசைகளிலே செல்ல, தம்மை புடைத்தாலும் - தம்மை அடித்தபோதும், சென்று சேர்ந்து திளைக்கும் - மீண்டும் சென்று எய்தி அம்மகளிரைப் பொருந்தா நிற்கும், அளிய - இரங்கத்தக்கன, அந்தோ - ஐயகோ, காமுகர் போல் அரிய செய்யும் - காமுகர்களைப்போன்று செய்தற்கரிய செயல்களைச் செய்யும், அடங்கா - அடக்கம் இல்லனவாய், (எ - று.) மடவார்கள் திசையிலே செல்லும்படி அப்பந்துகளைப் புடைக்கும் பொழுதும் அவைகள் காமுகர் போன்று அம்மகளிரைச் சென்று தழுவா நிற்கும், தம்மை அகலப் புடைக்கும் மகளிரை விரும்பும் அவை அளியவே என்றார் என்க. | (622) | | |
|
|