இதுவுமது

1753. செம்பொற் சுருளை மெல்விரலாற்
     றிருத்திச் செறிந்த தேரல்குல்
வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்து
     மணிமே கலையுந் 1தானேற்றி
அம்பொற் குரும்பை மென்முலைமே
     லணிந்த 2பொன்ஞா ணருகொடுக்கிப்
பைம்பொற் றிலத நுதலொதுக்கிப்
     பாவை பந்து கைக்கொண்டாள்.
 
     (இ - ள்.) செம்பொன் சுருளை - செவ்விய பொன்னாலாய சுருளை என்னும்
காதணியை, மெல் விரலால் திருத்தி - நழுவாதபடி தனது மெல்லிய விரலாலே நன்கு
திருத்திக்கொண்டு, தேர் அல்குல் - தேர்த்தட்டை ஒத்த அல்குலிடத்தே, செறிந்த -
பொருந்திய, வம்பத்துகிலின் - புதிய ஆடையின் மிசை வடம் சூழ்ந்து - மணிவடத்தை
நன்கு விசித்து, மணிமேகலையும்தான் - மணிமேகலையையும், ஏற்றி - ஏறச்செறித்து,
அம்பொன் குரும்பை மென்முலைமேல் - அழகிய பொற்றேமல் படர்ந்த தெங்கிளங்
குரும்பை போன்ற மெல்லிய முலைகளின் மிசை, பொன்ஞாண் அருகு ஒடுக்கி - விசித்த
பொற்சரட்டின் பக்கங்களை ஒடுக்கி, பைம்பொன் திலக நுதல் ஒதுக்கி - பசிய
பொற்றிலதமிடப்பட்ட நெற்றியிலே சரிந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டு, பாவை -
கொல்லிப்பாவை போன்ற சோதிமாலை, பந்து கைக்கொண்டாள் - ஆடுதற்குப் பந்தினைத்
தன் கையிலே ஏந்தா நின்றாள், (எ - று.)

சோதிமாலை ஆடத் தொடங்குபவள், சுருளைத் திருத்தி வடஞ்சூழ்ந்து மேகலை
ஏற்றி ஞாண் ஒடுக்கி நுதலொதுக்கிப் பந்தினைக் கைக்கொண்டாள் என்க. வம்பத்துகில் - புதுமைமிக்க ஆடை.

(623)