இதுவுமது

1760.

இளமையா லெழுதரு மிணைமென் கொங்கையின்
வளமையாற் பொலிதரும் வனப்பின் மாட்சியால்
குளமையா னறவிரி குவளைக் கண்ணியான்
1உளமயா வு 2யிர்ப்பதோ ருவகை யெய்தினான்.
     (இ - ள்.) இளமையால் - சோதிமாலையின் இளமைப் பருவத்தானும், இணை மென்
கொங்கையின் வளமையால் - இரண்டாகிய மென்மையுடைய முலைகளின்
எழுச்சிவளத்தானும், பொலிதரும் வனப்பின் மாட்சியான் - விளங்கும் அழகினது
பெருமையாலும், குளம் ஐயால் நற விரி குவளைக் கண்ணியான் - நெற்றியின் எழிலானும
தேன் பிலிற்றும் குவளைமலர் மாலையையுடைய திவிட்டன், உளம் அயாவுயிர்ப்பதோர்
உவகை யெய்தினான் - நெஞசம் தாங்காதே அயாவுயிர்த்தற்கு ஏதுவாகிய பெரியதொரு
மகிழ்ச்சியுடையன் ஆனான், (எ - று.)

     அயா வுயிர்த்தல் - அளவிகந்த இன்பமாதல், துன்பமாதல் உளத்தை நிரப்பியபோது
மனம் அதன்கண் அழுந்தித் தன்வய மிழந்த பின்னர் மீண்டும் ஒருவாறு தன்வயப்படுங்கால்
ஒரு பெருமூச்செறிதல். குளம் - நெற்றி, நீர்நிலை முதலிய பலபொருள் தரும் ஒருசொல்.
குளமையால் - நீர்நிலையின் சிறப்பினாலே, நறவிரி - தேனை மிகுதியாகப் பொழியும் எனப்
பொருள்கொண்டு திவிட்டனுக்கு அடையாக்கினும் அமையும்.

(630)