திவிட்டன் சூழ்ச்சிமன்றம் எய்துதல்

1761. செல்வியைத் திருக்குழ றிருத்தித் தேவிதன்
அல்குன்மே லினிதினங் கிருவி யாயிடை
மல்குபூ மந்திர சாலை மண்டபம்
பில்குபூந் தெரியலான் 1பெயர்ந்து போயினான்.
 
     (இ - ள்.) செல்வியை - சோதிமாலையை, திருக்குழல் திருத்தி - அழகிய அளகத்தைத்
தன்கைகளால் ஒப்பனை செய்து, தேவி தன் அல்குல் மேல் இனிதின் அங்கு இருவி
ஆயிடை - சுயம்பிரபையின் மடிமேல் இனிதாக அவ்விடத்தே இருத்திய பின்னர், மல்கு பூ
மந்திரசாலை மண்டபம் - மலர் மிக்க சூழ்ச்சி மண்டபத்திற்கு, பில்கு பூந் தெரியலான்
-தேன் துளிக்கும் மலர்மாலை அணிந்த திவிட்டமன்னன், பெயர்ந்து போயினான் - எழுந்து
சென்றான், (எ - று.)

     சோதிமாலையின் பருவமுதிர்ச்சியைக் கண்ட திவிட்டன் அமைச்சர்களைக் கலந்து
சோதிமாலையின் திருமணத்தைப்பற்றி முடிவு செய்தற்கு அவ்விடத்தைவிட்டு அகலலாயினன்
என்க.

(631)