சுயம்வர முரசறைகெனல் | 1762. | அருத்தநூ லவரொடு மாய்ந்து மற்றவர் கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான் திருத்தகு 1சுயம்வர முரசந் திண்களிற் றெருத்தின்மே லறைகென விறைவ னேயினான். | (இ - ள்.) அருத்தம் நூலவரொடும் ஆய்ந்து - பொருள் பொதிந்த மெய்ந்நூற் பயிற்சி மிக்க அமைச்சர்களுடனே ஆராய்ந்து, மற்றவர் கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான் இறைவன் - அவ்வமைச்சர்களுடைய கருத்துடன் ஒத்த ஆள்வினைத் திறமுடைய திவிட்ட மன்னன், திருத்தகு சுயம்வர முரசம் - மாண்புமிக்க சுயம்வரச் செய்தியை அறிவித்தற்கியன்ற முரசினை, திண் களிற்று எருத்தின்மேல் அறைகென - திண்ணிய அரசுவாவின் எருத்தின்மேல் ஏறியிருந்து முழக்கி அறிவிப்பீராக என்று, ஏயினான் - முரசறை மரபினர்க்குப் பணித்தான், (எ - று.) சோதிமாலைக்குச் சுயம்வரம் ஏற்படுத்தித் திருமணம் புரிவித்தலே சிறப்புடைத்தென, அமைச்சர்களைக் கலந்தெண்ணியதில் முடிவேற்பட்டமையின் சுயம்வரமுரசு அறையச் செய்தனன், என்க. | (632) | | |
|
|