இதுவுமது | 1772. | கண்சுட ரிலங்குவேற் 1காள வண்ணனும் வெண்சுட ரொளியவன் றானும் விஞ்சையர் தண்சுடர்த் தமனிய வண்ணன் றன்னொடும் மண்சுட ருறுப்பதோர் வகைய ராயினார | (இ - ள்.) கண்சுடர் இலங்குவேற் காள வண்ணனும் - தன்னிடத்தே சுடர்விட்டு விளங்குகின்ற வேற்படையுடைய நீல வண்ணனாகிய திவிட்டனும், வெண்சுடர் ஒளியவன தானும் - வெளிதாய்ச் சுடரும் ஒளியையுடைய விசயனும், விஞ்சையர் தண்சுடர்த் தமனிய வண்ணன் தன்னொடும் - விச்சாதரவேந்தனாகிய குளிர்ந்த ஒளியையுடைய பொன்வண்ணனாகிய அருக்க கீர்த்தியும் ஒன்றுகூடி, மண்சுடர் உறுப்பதோர் வகையார் ஆயினார் - இம் மண்ணுலகத்தையே ஒளிரச்செய்யும் ஒரு தன்மையுடையர் ஆனார், (எ - று.) விசயனும் திவிட்டனும் அருக்ககீர்த்தியுமாகி மூன்று மன்னர் மக்களும் மூன்று சுடர்கள் உலகத்தை விளக்குவதைப் போன்று தம்முடல் ஒளியால் உலகை விளக்கினர் என்க. | (642) | | |
|
|