1777. அங்கதற் கைந்துகோ லளவி னாடரங்
கிங்குவந் திறுத்தன வென்னு மீட்டன
செங்கதிர்ப் பவழக்கா னிரைத்த செம்பொனான்
மங்கலச் செய்கைய மஞ்சு சூழ்ந்தவே.
      (இ - ள்.) அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் - அவ்விடத்தே அவ்
வேதிகையினின்றும் ஐந்து கோல் தொலைவிடத்து, ஆடரங்கு இங்கு வந்து
இறுத்தனவென்னும் ஈட்டன - அரம்பையர் ஆடும் அரங்கு, இவ்விடத்தே இறங்கி வந்து
தங்கின வென்று கூறும்படி பெருமை யுடையனவாய், செங்கதிர் பவழக்கால் நிரைத்த -
செவ்விய ஒளியுடைய பவழத் தூண்கள் நிரலாக நிறுத்தப்பட்டனவும், மங்கலச் செய்கைய -
அழகிய தொழிற்றிறன் அமைந்தனவும், மஞ்சு சூழ்ந்தவே - முகில்கள் தவழ்வனவும்,
(எ - று.)

     அவ் வேதிகையினின்றும் ஐந்துகோல் தொலைவின்கண் அரம்பையர் ஆடரங்கு
போன்றனவும் பவழக்கால் நிரைத்தனவும் மங்கலச் செய்கை செய்தனவும்
மஞ்சுசூழ்ந்தனவுமாய் என்க. (1781) சயமர மாளிகைகள் இயற்றி என முடித்திடுக.

(647)