வேறு அரசன் திருக்கோயிலை அடைதல் | 178. | இன்னண மிளையவர் மருள வீண்டுசீர் மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக் கன்னவில் புரிசையுட் 6கடவுட் காக்கிய பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான். | (இ - ள்.) ஈண்டு சீர்மன்னவன் - நிறைந்த புகழையுடைய சுவலனசடியரசன்; இன்னணம் - இவ்வாறு; இளையவர் மருள - தன்னுடைய மனைவியர் இன்பமயக்க மடையும்படி; வயந்தம் ஆட்டு அருளி - இளவேனிற் காலத்துப் பொழில் விளையாடுதலைப்புரிந்து, மாமணிக் கல்நவில் புரிசையுள் கடவுட்கு ஆக்கிய பொன்நவில் திருநகர் - சிறந்த மணிக்கற்கள் பதித்துச் செய்யப்பட்ட மதிலினுள்ளே அருகக்கடவுட்கு அமைக்கப்பெற்ற பொன்மயமான திருக்கோயிலை; பூவொடு எய்தினான் - மலருடனே யடைந்தான். (எ - று.) கடவுள் - அருகன். ஆட்டு - ஆடல். மணிக்கல் - மணியாகியகல். புரிசை - மதில். பூ - மலர்ப்பலி. | ( 60 ) | | |
|
|