அயோத்தி அரசன் வருகை | வேறு | 1784. | எரிமணி வயிரப் பூணா னிக்குவா குலத்துட் டோன்றி அருமணிப் புரிசை வேலி யயோத்தியாள் கின்ற வேந்தன் திருமணி நிழற்றுஞ் செம்பொன் னெடுமுடி திருவில் வீசப் புரிமணி யாரந் தாழப் பொன்னகர் பொலியப் புக்கான். | (இ - ள்.) எரிமணி வயிரப் பூணான் - சுடருகின்ற வயிர மணி அணிகலனைப் பூண்டவனும், இக்குவா குலத்துட்டோன்றி - பெருமைமிக்க இக்குவாகுவின் நல்ல குலத்திலே பிறந்து, அருமணிப் புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன் - பெறற் கரும் மணிகள் பதித்த மதிலை வேலியாகவுடைய அயோத்தி நகரத்தை ஆளுகின்றவனுமாகிய மன்னன், திருமணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திருவில் வீச - சிறந்த மணிகள் சுடருகின்ற செவ்விய பொன்னாலாகிய தனது நீண்ட முடிக்கலன் அழகிய ஒளியைப் பரப்பவும், புரிமணி ஆரந்தாழ - விருப்பத்தைத் தூண்டுதலை யுடைய முத்துமாலை தூங்கவும், பொன்னகர் - அழகிய அம்மண்டபம், பொலியப் புக்கான் - பொலிவுறும்படி வந்து புகுந்தான், (எ - று.) அம் மண்டபத்தே அயோத்தி வேந்தன் நெடுமுடி திருவில் வீச ஆரந்தாழ அது பொலியப் புக்கான் என்க. இக்குவாகு குலம் ஐம்பெருங்குலங்களுள் ஒன்று. | (654) | | |
|
|