வாரணவாசி மன்னன் வருகை

1787. ஊழிகாண் பரிய தோன்ற லுக்கிர குலத்து வேந்தன்
வாழைதாழ் சோலை வேலி வாரண வாசி மன்னன்
சூழிமா லியானை யுந்திச் சுடர்குழை திருவில் வீச
ஏழையர் கவரி வீச வெழினக ரிசைப்பச் சென்றான்.
     (இ - ள்.) ஊழி காண்பரிய தோன்றல் - இறுதியில்லாத புகழையுடைய, உக்கிரகுலத்து
வேந்தன் - உக்கிரமரபிற் பிறந்த மன்னனும், வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி
மன்னன் - வாழைமரங்கள் செழித்துத் தங்குதலையுடைய பொழில்கள் சூழ்ந்த
வாரணவாசியை ஆள்பவனும் ஆகியவன், சூழி மால் யானை உந்தி - முகபடாம் அணிந்த
பெரிய யானையை ஊர்ந்து, சுடர்குழை திருவில் வீச - சுடருகின்ற குண்டலங்கள் சிறந்த
ஒளியைப் பரப்பவும், ஏழையர் கவரி வீச - மகளிர்கள் தாமரை இரட்டவும், எழில் நகர்
இசைப்ப - அழகிய நகர மாந்தர் புகழவும், சென்றான் - செல்வானாயினான், (எ - று.)

     தோன்றல் - புகழ். உக்கிரகுலத்தே தோன்றி இறுதியில்லாப் புகழுடையனாய்,
வாரணவாசியை ஆள்கின்ற மன்னன் யானையுந்தி வில் வீசக் கவரிவீச இசைப்பச்
சென்றான் என்க.

     உக்கிரகுலம் ஐம்பெருங் குலத்துளொன்று.      

(657)