வாரணவாசி மன்னன் வருகை | 1787. | ஊழிகாண் பரிய தோன்ற லுக்கிர குலத்து வேந்தன் வாழைதாழ் சோலை வேலி வாரண வாசி மன்னன் சூழிமா லியானை யுந்திச் சுடர்குழை திருவில் வீச ஏழையர் கவரி வீச வெழினக ரிசைப்பச் சென்றான். | (இ - ள்.) ஊழி காண்பரிய தோன்றல் - இறுதியில்லாத புகழையுடைய, உக்கிரகுலத்து வேந்தன் - உக்கிரமரபிற் பிறந்த மன்னனும், வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன் - வாழைமரங்கள் செழித்துத் தங்குதலையுடைய பொழில்கள் சூழ்ந்த வாரணவாசியை ஆள்பவனும் ஆகியவன், சூழி மால் யானை உந்தி - முகபடாம் அணிந்த பெரிய யானையை ஊர்ந்து, சுடர்குழை திருவில் வீச - சுடருகின்ற குண்டலங்கள் சிறந்த ஒளியைப் பரப்பவும், ஏழையர் கவரி வீச - மகளிர்கள் தாமரை இரட்டவும், எழில் நகர் இசைப்ப - அழகிய நகர மாந்தர் புகழவும், சென்றான் - செல்வானாயினான், (எ - று.) தோன்றல் - புகழ். உக்கிரகுலத்தே தோன்றி இறுதியில்லாப் புகழுடையனாய், வாரணவாசியை ஆள்கின்ற மன்னன் யானையுந்தி வில் வீசக் கவரிவீச இசைப்பச் சென்றான் என்க. உக்கிரகுலம் ஐம்பெருங் குலத்துளொன்று. | (657) | | |
|
|