| Choolamani |

மன்னர்கள் மன்றமேறி விளங்குதல்

1790. ஐம்பெருங் குலத்த ராய 3வரசரும் பிறரு மாங்கண்
கம்பெறி 4களிநல் யானைக் கடற்படை புறத்த தாக
வம்பெறி வளாகஞ் செம்பொன் மஞ்சங்கண் மலிர வேறி
வெம்பறி விளங்குந் தானை வேலவர் விளங்கு கின்றார்.
     (இ - ள்.) ஐம்பெருங் குலத்தராய அரசரும் - இக்குவாகு குலம் முதலிய ஐந்து
பெருங்குலங்களுட் டோன்றியவராய அரசரும், பிறரும் - அவ்வரச ரல்லாத ஏனையோரும்,.
கம்பு ஏறி களி நல் யானை கடற்படை புறத்ததாக - கட்டுந் தூணை முறிக்கும்
மதக்களிப்புடைய நல்ல யானை முதலிய நால்வகைப்பட்ட கடல் போன்ற தத்தம் படைகளை
நகர்ப்புறத்தே வைத்து, வம்பு எறி வளாகம் செம்பொன் மஞ்சங்கள் மலிரவேறி -
மணங்கமழும் வட்ட வடிவினவாய ஆதனங்கள் திகழும்படி வீற்றிருந்து, வெம்பரி விளங்கும்
தானை வேலவர் - வெவ்விய புரவிகளால் விளக்கமுறுகின்ற படையையுடைய
அவ்வேந்தர்கள், விளங்குகின்றார் - திகழ்ந்தனர், (எ - று.)

     ஐம்பெருங்குலமாவன : - இக்குவாகுமரபு, அரிமரபு, நாதமரபு, குருமரபு, உக்கிரமரபு,
என்பன.

     இவ்வாறு ஐம்பெருங்குலத்து வேந்தரும் பிறவேந்தரும் படைபுறத்தவாக, மஞ்சங்கள்
மலிர ஏறி விளங்குகின்றார் என்க.

(660)