முல்லை நிலம் | 18. | கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும் முன்றி லேறிய முல்லையம் பந்தரும் நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ மன்றெ லா மண நாறும ருங்கினே. | (இ - ள்.) மருங்கின் - முல்லைநிலப் பக்கத்தில்; கொன்றையும்-கொன்றை மரங்களிலும்; குருந்தும் - குருந்த மரங்களிலும்; குலைக்கோடலும் - மலர்க்கொத்துக்களையுடைய காந்தட் செடிகளிலும்; முன்றில் அம்பந்தர் ஏறிய முல்லையும் - வீட்டின் முன்றிலில் அமைத்த பந்தர்களிற் படர்ந்த முல்லைக்கொடிகளிடத்தும்; தேன் நிரந்த-வண்டுகள் பரவி; நின்று ஊத - மொய்த்திருந்து ஊத; விரிந்து - அப்பூக்கள் மலர்ந்து; மன்று எலாம் மணம்நாறும் - வெளியிடங்களிலெல்லாம் நல்ல மணத்தை வீசும். (எ - று.) முல்லை நிலத்தில் உண்டாகிய மணத்தை இப்பாட்டில் மொழிகின்றார். முல்லைக்கு மரம் கொன்றையுங் குருந்தும். பூ முல்லையும் தோன்றியும். முன்றில் அம்பந்தர் ஏறிய முல்லையும் என இயைத்துக் கொள்க. கோடல் - வெண்காந்தள். அரோ - அசை. மன்று - வெளிமணனாறும். | ( 18 ) | |
|
|