சுடர் விளங்குதல்

180.

பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன
மணிநிலை விசும்பொடு 1வரங்க ளீவன
கணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம்
மணிநிலைச் சடரொளி மலர்ந்து தோன்றவே.
 

     (இ - ள்.) பிணிநிலை பெயர்ப்பன - தன்னையடைந்தார்களது உடற்பிணியைக்
கெடுப்பனவும்; பிறவி தீர்ப்பன - அவர்களது பிறப்பை யொழிப்பனவும்; மணிநிலை
விசும்பொடு வரங்கள் ஈவன - அழகிய தன்மையையுடைய விண்ணுலகப் பேற்றோடு
வேண்டும் வரங்களைக் கொடுப்பனவுமான; கணிநிலை இலாத் திறல் - அளவு செய்தற்கு
எல்லை யில்லாத ஆற்றல்களையுடைய; கடவுள் தானகம் - அவ்வருகக் கடவுளின்
இருப்பிடத்தில்; மணிநிலைச் சுடர் ஒளி - மாணிக்கத்தின் தன்மையையுடைய விளங்குகின்ற
ஒளி; மலர்ந்து தோன்ற - பரந்து காணப்பட. (எ - று.)

உடற்பிணியைப் போக்கல், பிறவிப்பிணியை நீக்கல், விண்ணுலகப் பேற்றையும் வேண்டும்
மேன்மைகளையும் கொடுத்தல் முதலிய சிறப்புக்களை யுடைய திருக்கோயிலில் மணிநிலைச்
சுடரொளி பரந்து காணப்பட, அவ்வொளியையுடைய கடவுளை அரசன் வணங்கத்
தொடங்குகிறான்.

( 62 )