இதுவுமது | 1800. | அணிதயங்கு சோபான வீதிவா யணங்கனையா ரடியீ டேத்த மணிதயங்கு மாளிகைமேல் வாணிலா வளர்முன்றின் மருங்கு சூழ்ந்து, கணிதயங்கு வினைநவின்ற 1கண்டத்துத் திரைமகளிர் கையி 2னீக்கத், துணிதயங்கு வேலரசர் மனந்துளங்கச் சுடர்ந்திலங்கித் தோன்றி னாளே. | (இ - ள்.) அணிதயங்கு சோபான வீதிவாய் - அழகுற்றுத் திகழ்தலையுடைய படிக்கட்டுகளின் வழியே, அணங்கு அனையார் - தெய்வமகளிர் போன்ற உழைக்கலமகளிர்கள், அடியீடு ஏத்த - அவள் அடியிடுந்தோறும் இறைஞ்சிப் போற்றா நிற்ப, மணிதயங்கு மாளிகைமேல் - மணிகள் சுடரும் மாளிகையின் மேலிடத்துள்ள, வாள் நிலா வளர் முன்றின் - நிலவொளி மிகும் முற்றத்தே சென்று, மருங்குசூழ்ந்து - தன் பக்கத்தே மொய்த்து, கணி தயங்கு வினைநவின்ற கண்டத்துத்திரை - நூல்வல்ல தொழிற் புலவராலே திகழ்கின்ற வினைத்திற மமைய இயற்றப்பட்ட பல வண்ணத் திரைச்சீலயை, மகளிர் கையின் நீக்க - மகளிர்கள் தம் கையாலே அகற்ற, துணி தயங்குவேல் அரசர் மனந்துளங்க - துணிவுடைமை விளங்குதற்குக் காரணமான வேற்படையை உடைய வேந்தர்களின் நெஞ்சம் கலங்க, சுடர்ந்து இலங்கித் தோன்றினாள் - ஒளிவிட்டு விளங்கித் தோன்றா நின்றாள், (எ - று.) கண்டத்திரை - பலவண்ணமுடைய திரைச்சீலை. சோதிமாலை சோபான வழியே அணங்கனையார் அடியீடேத்த மாளிகைமேல் நிலாமுன்றில் சேர்ந்து கண்டத்திரையை மகளிர் நீக்க அரசர் மனந்துளங்கத் தோன்றினாள் என்க. | (670) | | |
|
|