இவன் இக்குவாகுலத்து இளங்கோ எனல்

1802. அங்கார வலர்கதிர மணிசுடரு
     மரியணைமே லமர்ந்து தோன்றித்
4தங்கார மணிநிழற்றுந் 5தடவரையா
     ரகலத்தான் றகர நாறும்
கொங்கார வார்குழலார் குவிமுலைகண்
     முகம்பொருத குவவுத் தோளான்
இங்காரு நிகரில்லா விக்குவா
     குலத்திறைவ னிருந்த கோவே.
     (இ - ள்.) ஆங்கு அலர் கதிர ஆரமணி சுடரும் - அவ்விடத்தே விரிந்த ஒளியுடைய
முத்துமாலை ஒளிவீசாநின்ற, அரியணைமேல் அமர்ந்து தோன்றி - சிம்மாசனத்தின் மேலே
வீற்றிருந்து விளங்கி, நிழற்றும் மணி ஆரம் தங்கு தடவரை ஆர் அகலத்தான் -
மிளிருகின்ற மணிவடம் கிடந்த பெரிய மலை போலும் மார்பையுடையவனும், தகரம் நாறும்
வார்குழலார் - மயிர்ச்சாந்து கமழும் நீண்ட அளகத்தையுடைய மகளிர்களின், கொங்கு ஆர
குவி முலை கண்முகம் பொருத - மணமுடைய சந்தனந் திமிர்ந்த குவிந்த முலைகளின்
கண்ணையுடைய குவடுகள் உழுத, குவவுத்தோளான் - திரண்ட தோள்களையுடையனுமாய்,
இருந்த கோ - இருக்கின்ற வேந்தன், இங்கு யாரும் நிகர் இல்லா இக்குவா குலத்து
இறைவன் - இவ்விடத்தே யாரும் தனக்கு ஒப்பாரிலாத இக்குவாகு மரபிற்றோன்றி
மன்னன்காண்! (எ - று.)

     அங்கு அரியணைமேல் அமர்ந்து தோன்றி நிழற்றுந் தடவரை அகலத்தான், நிகரில்லா
இக்குவா குலத்திறைவன் கோ என்றாள் என்க.

(672)