(இ - ள்.) இன்னவனது உயர்குலமும் இளமையும் இங்கு இவன் வடிவும் சொல்லவேண்டா - இப்பரதன் மரபினனாகிய மன்னனுடைய உயர்ந்த குலப்பெருமையையும், இவன் இளமை நலத்தினையும் அழகின் சிறப்பையும் இவ்விடத்தே இனி யான் கூறிக்காட்ட வேண்டா, மன்னவன்றன் மடமகளே - அரசன் மகளாகிய சோதிமாலாய், மற்றிவனுக்கு இடமருங்கின் மஞ்சம் சேர்ந்து - இம்மன்னனுக்கு இடப்பாகத்தே இடப்பட்ட இருக்கையின் மேலமைந்த, பொன் அவிரும் மணியணைமேல் - அழகு விரியும் மணிகளிழைத்த பஞ்சணையின் மேலே, பொழிகதிர் ஈண்டு எழுந்ததுபோல் பொலிந்து தோன்றும் - பொழிகின்ற சுடருடைய கதிரவனே இவ்விட,த்தே எழுந்தருளினாற் போன்று விளங்கித் தோன்றாநின்ற, கொல் நவின்ற வேல்குமரன் - கொலைத்தொழிலமைந்த வேலையுடைய இளமன்னன், கூறக்கேளாய் - யார் என யான் இயம்புவேன் கேள், இவனே குரு குலத்தார் கோன் - இவன் குருமரபிற்றோன்றிய மன்னன் ஆவான், (எ - று.)இவன் பெருமை உலகறிந்ததாகலின் கூறவேண்டா என்றாள், என்க. மன்னவன்றன் மடமகளே! இன்னவனை இனி யான் கூறவேண்டா, இவன் இடமருங்கே மஞ்சஞ் சேர்ந்து பொலிந்து தோன்றும் வேற் குமரன், குருகுலத்தார்கோன் கூறக் கேளாய் என்றாள் என்க. |