அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல் | 181. | மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன் கைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான் வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன் செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான். | (இ - ள்.) மெய் மயிர் எறிந்து - சுவலனசடியரசனானவன் உடம்பில் மயிர் சிலிர்க்கப்பெற்று, ஒளிதுளும்பும் மேனியன் - ஒளிவிளங்கும் உடலையு டையவனாய்; கை முகிழ் முடித்தடம் கதழச் சேர்த்தினான் - தாமரை யரும்பு போன்ற குவிந்த தனது கைகளைத் தன் தலைமீது விரைவாகக் குவித்து; வெம்மை செய் வினைத்துகள் விளியவென்றவன் - தீமையைச் செய்கின்ற இருவினைத் தூள்கள் பறந்தோடிக் கெடுமாறு வென்றவனான அருகக் கடவுளது; செம்மலர்த் திருந்தடி - செந்தாமரை மலர் போன்ற அழகிய அடிகளை; சீரின் ஏத்தினான் - சிறப்பாகப் போற்றினான். (எ - று.) உடம்பில் மயிர்க்கூச் செறிதலும், உடம்பின் இயற்கையொளி மிகுதலும் அன்பினாலாகும் மெய்ப்பாடுகள். குவித்த கைகளை விரைவாகத் தலைமீது கொண்டான் என்பது இரண்டாம் அடிக்குப் பொருள். | ( 63 ) | | |
|
|