கலிங்கமன்னனும் மகதமன்னனும்

1818. காந்தளங்கட் கமழ்குலையாற் 1களிவண்டு
     களிறகற்றுங் கலிங்க நாடன்,
பூந்தளவங் கமழ்சாரற் பொன்னறைசூழ்
     தண்சிலம்ப னன்றே பொன்னே,
ஏந்திளஞ்சிங் காதனத்தி னினிதிருந்த
     விளவரச னிப்பா லானோன்,
மாந்தளிர்கண் மருங்கணிந்த மணியருவிக்
     குன்றுடைய மகதைக் கோவே.
     (இ - ள்.) கள் கமழ் காந்தளம் குலையால் - தேன்மணக்கும் காந்தளின் அழகிய
பூங்கொத்தாலே, களிறு களிவண்டு அகற்றும் - யானைகள் தம்மேல் மொய்க்கின்ற
களிப்பையுடைய வண்டுகளை ஓச்சா நிற்கும், கலிங்க நாடன் - கலிங்க நாட்டரசனும்,
பூந்தளவம் கமழ் சாரல் பொன்னறை சூழ் தண் சிலம்பன் - அழகிய முல்லை மணக்கும்
தாழ்வரைகளையும் உச்சியினையும் உடைய குளிர்ந்த மலைகளை யுடையவனும் ஆவான்,
பொன்னே - திருமகள் போல்வாளே!, ஏந்திளம் சிங்காதனத்தின் இனிது இருந்த இளவரசன்
- இளைய அரிமாச் சுமந்த அணையிடத்தே இனிதாக வீற்றிருந்த இவ்விள மன்னன்,
இப்பால் ஆனோன் - அம்மன்னனுக்கு இப்புறத்தே அமர்ந்திருக்கின்ற அரசன்,
மாந்தளிர்கள் மருங்கு அணிந்த - மாமரத்தினது தளிர்களை அணிந்துள்ள
பக்கங்களையுடைய, மணியருவி - நீல மணி போன்ற நிறமுடைய அருவிகள் பாய்கின்ற,
குன்று உடைய மகதைக் கோமான் - மலைகளையுடைய மகதநாட்டு மன்னன் ஆவான்,
(எ - று.)

     சிங்காதனத்தில் இனிதிருந்த இளவரசன் தளவங் கமழ்சாரால் சிலம்பன் கலிங்கநாடன்
ஆவன், இப்பாலானோன் குன்றுடைய மகத மன்னன் என்றாள், என்க.

(688)