வேறுபல மன்னர்கள் | 1819. | அங்கநா டுடையவர்கோ னவ்விருந்தா னிவ்விருந்தா னவந்திக் கோமான், கொங்குவார் பொழிலணிந்த கோசலத்தார் கோமானிக் குவளை வண்ணன், கங்கைதா னிருகரையுங் கதிர்மணியும் பசும்பொன்னுங் கலந்து சிந்தி வங்கவாய்த் திரையலைக்கும் வளநாட 2னிவன்போலும் வைவேற் காளை. | (இ - ள்.) அவ் விருந்தான் - அவ்விடத்தே இருக்கின்றவன், அங்கநாடு உடையவர் கோன் - அங்கநாட்டில் வாழுநர்க்கு வேந்தன், இவ் விருந்தான் - இவ்விடத்தே இருக்கின்றவன், அவந்திக் கோமான் - அவந்தி நாட்டு அரசன், இக்குவளை வண்ணன் - இந்தச் செங்கழுநீர் மலர்போன்ற நிறமுடையோன், கொங்குவார் பொழில் அணிந்த கோசலத்தார் கோமான் - மணங்கமழும் நீளிய பூம்பொழில்களைப் பூண்டுள்ள கோசல நாட்டினர் மன்னன், வைவேற் காளையிவன் - கூரிய வேலேந்திய காளைபோன்ற இவன், கங்கைதான் இருகரையும் - கங்கைப் பேரியாறு தன் இரண்டு கரைகளிடத்தேயும், கதிர்மணியும் பசும் பொன்னும் கலந்து சிந்தி - ஒளியுடைய மணிளையும் பசிய பொன்துகள்களையும் விரவிச் சிதறி, வங்வாய்த் திரை அலைக்கும் - மரக்கலங்கயைுடைய கடலை வருத்துகின்ற வள நாடன் - வளமுடைய நாட்டின் மன்னர் ஆவான், (எ - று.) இவ்விடத்திருந்தான் அங்கநாட்டரசன்; அவ்விடத்திருந்தான் அவந்திமன்னன்; இக்குவளை வண்ணன் கோசலத்தார் கோமான்; இவன் கங்கை சிந்தித் திரையலைக்கும் வளநாடன் என்றாள், என்க. | (689) | | |
|
|