(இ - ள்.) நெய்த்தலைப் பால் உக்கு ஆங்கு - நெய்யின்கண் பால் பொழியப்பட்டாற் போன்று, நெடுவரை உலகின் வந்த - நீண்ட மலையுலகாகிய இரத நூபுரத்தினின்றும் வந்த, மைத்துன குமரன்றன்னை - தன் மைத்துனனாகிய அமித தேசனை, மடமொழி - சோதிமாலை, மாலை சூட்ட - இவ்வண்ணம் மணமாலை சூட்டா நிற்ப, இத்தலை - இவ்விடத்தே, அரசர் கோமான் - மன்னர் மன்னனாகிய, எரிகதிர் ஆழி வேந்தன்- விளங்கிய சுடர் உடைய சக்கரப் படையையுடைய திவிட்ட மன்னன், கைத்தலை வேலினாற்கு - கையிடத்தே வேற்படையையுடைய அமித தேசனுக்கு, கடிவினை முடிவித்தான் ஏ - திருமண வினையை எஞ்சாது நிகழ்த்தி முடித்தான், (எ - று.) சோதிமாலைக்கும் அமிததேசனுக்கும் உள்ள உறவினை உணர்த்து வார் “நெய்த்தலைப்பாலுக்காங்குÓ என்றார். மைத்துன குமரன்றன்னை மடமொழி மாலைசூட்ட, இத்தலை ஆழி வேந்தன் அவ்வேலினாற்குக் கடிவினை முடிவித்தான் என்க. |