இதுவுமது | 1830. | தருமணன் மணிமுத் தாகத் 1தண்டுல மியற்றிக் 2கான்யா றருமணற் றருப்பை சூழ்ந்தாங் கதன்மிசை பரிதி பாய்த்திப் பெருமண மன்னற் கேற்ற சமிதையாற் பெருக்கப் பட்ட திருமணி யுருவச் செந்தீ செல்வத்திற் சிறந்த தன்றே. | (இ - ள்.) தருமுத்து மணி மணலாக - பரதவராற் றரப்படும் முத்துக்களாகிய மணிகளையே மணலாகப் பரப்பி, தண்டுலம் இயற்றி - அரிசியைப்பரப்பி, கான் யாற்று அரு மணல் தருப்பை சூழ்ந்து - காட்டியாற்றின் கரைகளிலே அரிய மணற்பாங்கிலே முளைத்துச் செழித்த தருப்பைப் புற்களையும் பரப்பி, அதன் மிசைப் பரிதிபாய்த்தி - அதன்மேல் ஓமத்தீயை யிட்டு, பெருமணம் மன்னற்கேற்ற - பெரிய திருமணச் சடங்கினை அரசற்கென நூல் கூறிய முறையே, சமிதையாற் பெருக்கப்பட்ட - பலாசம் முதலியவற்றின் சுள்ளிகளாலே மிகுதியாக வளர்க்கப்பட்ட, திருமணி உருவச்செந்தீ - சிறந்த மணிபோன்ற உருவமுடைய செவ்விய வேள்வித்தீ, செல்வத்திற் சிறந்தது - தனக்குரிய எல்லா நலனும் பெற்றுச் சிறந்து விளங்குவதாயிற்று, (எ - று.) ஆக இயற்றிச் சூழ்ந்து, பாய்த்தி, சமிதையாற் பெருக்கப்பட்ட செந்தீ செல்வத்திற் சிறந்ததென்க. சமிதை - ஆல் முதலியவற்றின் சுள்ளிகள். பரீதி - யாகமேடை. தண்டுலம் - அரிசி. | (700) | | |
|
|