(இ - ள்.) திருமறுவு வலன் அணிந்து - சீவத்சம் என்னும் மறுவை வலத்திருமார்பிலே அழகியதாகக்கொண்டு; திகழ்கின்ற திருமூர்த்தி - விளங் குகின்ற அழகிய வடிவத்தையுடையவனே!; ஒருமறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்தும் - உனக்கு யாதொரு மறுவும் இல்லையென்பதை நூல்கள் தவறாமற் புலப்படுத்தும்; ஒருமறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்துகினும் - ஒருமறுவும் இல்லையென்பதை நூல்கள் தவறாமற் புலப் படுத்தினாலும்; அருமறையை விரித்தாயை - அருமையான மறைகளை விரித் துரைத்த நின்னை; அறிவாரோ அரியர் - உள்ளபடியாக உணர்பவரோ உலகத்திலே மிகவும் அருமையானவராவர். (எ - று.) பத்மம், சங்கம், மத்ஸ்யம், ஸ்ரீ வத்ஸம், ஸ்வஸ்திகம், நந்தியா வர்த்தம் முதலிய இரேகைகள் நூற்றெட்டும், மசூரிகை முதலிய அடையாளங்கள் தொள்ளாயிரமும் ஆக மறுக்கள் ஆயிரத்தெட்டு என்று சைனநூல்கள் கூறும். இவ்வாறு மறுவையணிந்து விளங்கும் திருமேனியை உடையவனான உனக்கு மறுவொன்றும் [குற்றம் ஒன்றும்] இல்லையென்று நூல்கள் கூறும் என்ற நயம் காண்க. உனது வடிவத்தை நூல்கள் தவறாமற் பல விடங்களில் தெரிவித் தாலும் அருமறையை விரித்துரைத்தவனாகிய நின்னை உணரக்கூடியவர்களோ ஒருவரும் இல்லையென்றபடி. |