பயாபதியின்பால் பெயரர்கள் எய்துதல்

1841. திருமகி ழலங்கன் மார்பிற்
     செங்கணான் வணங்கச் செல்வப்
பெருமகிழ் வெய்தி வேந்தன்
     பிரசாபதி பெரிய வாட்கண்
உரிமையொ டிருந்த போழ்தி
     னொலிகல னொலிப்ப வோடி
அருமைகொ டிகிரி யாள்வான்
     சிறுவர்சென் றணுகி னாரே.
      (இ - ள்.) திருமகிழ் அலங்கல் மார்பன் - திருமகள் மகிழ்ந்து வதிகின்ற
மாலையணிந்த மார்பினையுடைய, செங்கணான் - சிவந்த கண்களையுடைய திவிட்ட மன்னன
வணங்க - தன் அடிகளிலே வணங்கா நிற்ப, செல்வப்பெருமகிழ்வு எய்தி - செல்வமுடைமை
காரணமாகப் பெரியதொரு மகிழ்ச்சியையடைந்து, வேந்தன் பிரசாபதி - பயாபதி மன்னன்,
பெரிய வாட்கண் உரிமையொடு இருந்தபோழ்தின் - பெரிய வாள் போலும் கண்களுடைய
உரிமைத் தேவியோடு வீற்றிருந்த அமையத்தே, அருமைகொள் திகிரியாள்வோன் -
பெறற்கரிய ஆழிப்படையை யுடைய திவிட்டனுடைய, சிறுவர் - இளமகார்கள், ஒலிகலன்
ஒலிப்ப வோடி சென்று - கிண்கிணி முதலிய ஒலிக்கும் அணிகலன்கள் ஆரவாரிக்கும்படி
ஓடிப் போய், அணுகினாரே - அப்பயாபதி வேந்தனை அடைந்தனர். (எ - று.)

சிறுவர் என்றது விசயனையும் சோதிமாலையும், செங்கணான் வணங்க. மகிழ்வெய்திப்
பயாபதி உரிமையோடிருந்த போழ்து, திகிரி யான் செல்வர் ஒலிப்ப, ஓடி அணுகினார் என்க

(711)