(இ - ள்.) ஏந்தல் - அரசனானவன்; இன்னணம் இறைவனை ஏத்தி - இவ்வாறு அருகக்கடவுளைப் போற்றி; தன் சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன் - தனது முடியில் அணிந்துகொண்ட எஞ்சிய மலர்களையுடைய வனாய்; கல்நவில் திருவணிக் கபாடம் தாழ்உறீஇ - மணிகள் பதிக்கப்பெற்ற வையும் ஒலிக்கும் அழகிய மணிகளமைத்தவையுமான கோயிற் கதவுகளைச் சாத்தித் தாளிட்டு; முன்னிய திருநகர் முற்றம் முன்னினான் - எண்ணி வழிபட்ட திருக்கோயிலின் முன்னிடத்தை யடைந்தான், (எ - று.) சேடப்பூ - கடவுள் அடிகளில் பூசித்த பின் அக்கடவுளின் அருட் பொருளாகப் பெற்றுக்கொள்ளும் பூ; இதனை நிர்மாலியம் என்பர். அரசன் கடவுள் வழிபாட்டை முடித்துக்கொண்டு திருக்கோவிலைப் பூட்டிக்கொள்ளு மாறு செய்து வெளிப்பட்டனன் என்க. |