அறிவிலாதார் செயல்

1851.

வல்வினை விளைத்த 1மாந்தர்
     மற்றதன் வித்து மாட்டிப்
புல்வினை கான மண்டிப்
     புலியின்வாய்ப் பட்ட தேபோல்
நல்வினை யினிதி 2னூட்டு
     நல்வினை முதல்கண் மாறி
இல்வினை யின்பம் வெஃகி
     யிறுபவே யறிவி லாதார்.
     (இ - ள்.) நல்வினை இனிதின் ஊட்டும் - நல்வினைகள் தம் பயனை ஊட்டுமிடத்து
இனிதின் இன்புறுமாறு ஊட்டா நிற்கும், நல்வினை முதல்கண் மாறி - அந்நல் வினையின்
காரணங்களினின்றும் விலகி, இல்வினை யின்பம் வெஃகி - இல்லிடத்தே யிருந்து முயன்று
பெறும் இன்பத்தையே பெரிதும் விரும்பி, வல்வினை விளைத்த அறிவிலாதார் மாந்தர் -
தீவினைகளையே பெரிதும் செய்துகொண்ட பேதை மனிதர்கள், மற்றதன் வித்தும் மாட்டி -
அத்தீவினைகளின் விதைகளையும் மேலைக்கு விளைவாக மூட்டி வைத்து, புல்வினைக்
கானம் மண்டி - தம்மைச் சூழத் தீவினைக்காடுகளே மண்டப் பெற்று, புலியின்
வாய்ப்பட்டதேபோல் - அக்காட்டினூடே புலியின் வாயகத்தே பட்டது போன்று துன்பமுற்று,
இறுபவே - மாண்டொழிவர், (எ-று.)

     இன்பமே காமுறுவோராயிருந்தும், அவ்வின்பம் நல்வினையே ஊட்டும் என்பதனை
அறியாதார், இன்பமே வெஃகி அல்வினை செய்து அல்லல் உ.ற்று மாண்டொழிவர் என
அறியாமையை நினைந்து இரங்கியவாறு.

     “துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை,
     இன்பமே காமுறுவ ரேழையார்Ó
என்றார் பிறரும்,    

(721)