(இ - ள்.) மலை பயில் - மலையிடத்தே வழங்குதலையுடைய, களி நல்யானை - மதக்களிப்புடைய நல்ல யானைகளையுடைய, மன்னரால் - பகை வேந்தர்களால், வவ்வல் இன்றாய் - கவரப்படாததாய், கலைபயில் மகளிர் கண்போல் - ஆடல் முதலிய கலைபயிலுதலையுடைய கணிகை மகளிருடைய கண்களைப் போன்ற, கள்வர் கைப்படாது - களவு செய்வோருடைய கைகளிலும் அகப்படாததாய், நாளும் நிலையின செல்வக்கு - எப்பொழுதும் நிலைபெற்றுடைய செல்வத்திற்கு, ஊனம் நிகழ்வன உரைமின் என்றான் - இவற்றின் வெறாய் நிகழும் கேடு உளவாயில் கூறுங்கோள் என்றான், இலைபயில் மகரப் பைம்பூண் எரிமணிக் கடகக் கையான் - இலைபோன்ற வடிவமுடைய தொழிற் சிறப்பமைந்த மகரமீன் தலைவடிவிற்றாய முகப்பையுடைய பசிய பூணாகிய விளங்குகின்ற மணிகளாலியன்ற கடகம் செறிந்த கைகளையுடைய பயாபதி மன்னன், (எ - று.)ஆடலும் பாடலும் அழகும் காட்டி . “செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக் கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்கு பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிர்Ó (மணிமே.) என்பவாகலின், கலைபயில் மகளிர் கண்போல் கள்வர் என்றார். செல்வக்கு - செல்வத்திற்கு. ஊனம் - கேடு. பகை மன்னராற் கவரப்படாததாய், கள்வர் கைப்படாது நிலைத்த செல்வத்திற்கு வேறு ஊனம் யாதுளது என்று வினவினான் என்க. |