1856. | அக் கூற்றத்தை வெல்ல உபாயங் கூறுக என்னல் சந்தினாற் றவிர்க்க லாமோ சார்பினா லொழிக்க லாமோ பந்தியா முன்னந் தாமே பகைத்திருந் துய்ய லாமோ வெந்திறற் காலன் றன்னை மேற்சென்று வெல்ல லாமோ உய்ந்துயிர் யாங்கள் வாழு முபாயநீ ருரைமி னென்றான். | (இ - ள்.) சந்தினால் தவிர்க்கலாமோ - அக்கூற்றவாசனைச் சந்து செய்தலாலே உயிர்கொள்ளாதபடி ஒழித்தல் கூடுமோ, சார்பினால் ஒழிக்கலாமோ - அன்றி அவன்பால் அடைக்கலம் புகும் ஆற்றாலே ஒழித்தல் கூடுமோ, பந்தியா முன்னம்தாமே - அவன் நம்மைக் கட்டுதற்கு முன்னரே, பகைத்து இருந்து - அவனைப் பகைத்தே அவன் நம்மேல் வாராதபடி அரண்செய்து கொண்டு இருந்து, உய்யலாமோ - அவன்பாற் றப்பி உய்தல் கூடுமோ அன்றி, வெந்திறல் காலன் தன்னை - வெவ்விய ஆற்றலுடைய அம்மறலியை, மேற்சென்று - போர்மேற் சென்று போர்செய்து, வெல்லலாமோ - வென்றொழித்தல் கூடுமோ, யாங்கள் - யாம், உய்ந்து - அம்மறலிக்குத் தப்பி, உயிர் வாழும் உபாயம் - உயிர்வாழ்வதற்குரிய உபாயத்தை ஆராய்ந்து, உரைமின் என்றான் - கூறுங்கோள் என்று இயம்பினான், (எ - று.) சாம, பேத, தான, தண்டம் என்னும் உபாயங்களாலே அம் மறலிக்குத் தப்பி உயிர் வாழ்தல் கூடுமோ உரைமின் என்றான் என்க. | (726) | | |
|
|