(இ - ள்.) பீழைமை பலவும் செய்து - பல்வேறு இன்னல்களையும் இயற்றி, பிணிப்படை பரப்பி - நோயாகிய பல்வேறு படைகளையும் பரப்பி, வந்து - ஆயுள் முடிவிலே வந்து, வாழ் உயிர்ப்பு ஒழித்து - வாழ்தற்குக் காரணமான மூச்சையும் நிறுத்தி, உயிர் வலிந்து வவ்வி வாங்கி - உயிரை வலிந்து பிடித்துக் கவர்ந்து, உண்ணும் - குடிக்கின்ற, கூழைமை பயின்ற கூற்ற அரசனை - கயமைத் தொழிலில் வல்லவனாகிய மறலி மன்னனை, குதிக்கும் சூழ்ச்சி - கடத்தற்குரிய சூழ்வினையை, பாழியம் தடக்கை வேந்தே - வலியவாய அழகிய பெரிய கைகளையுடைய அரசனே, யாங்கள் பயின்றிலம் என்றார்- யாங்கள் கற்றோமில்லை என்று கூறினர், (எ - று.)கூழைமை - கயமை. கடமையுமாம். “அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க் கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் ‘கூழைமை’ செய்யாமே.Ó என்னும் பெரியாழ்வார் திருமொழியினும் கூழைமை இப்பொருட்டாதல் காண்க. பிணிகளாலே சாதல் நேருதலின் கூற்றனுக்குப் பிணிகளைப் படையாக உருவகித்தார், குதித்தல் - கடத்தல், ‘கூற்றங் குதித்தலும்’ என்னும் திருக்குறளினும் இஃது ‘இப்பொருட்டாதல்’ காண்க, கூற்றத்தை மாற்றும் சூழ்ச்சி யாங்கள் பயின்றிலம் என்றார் என்க. |