இதுவுமது

1869. இன்னிசை முரசங் கேட்டே
     மெய்பெரி தினிய கேட்டா
மன்னிய நங்கள் வாணாள்
     வாழ்கநம் மிறைவ னென்னாப்
பொன்னியன் மலருஞ் சாந்துஞ்
     சுண்ணமும் புகையும் பொங்கத்
துன்னிய நகர மாந்தர்
     3துறக்கம்பெற் றவர்க ளொத்தார்.
     (இ - ள்.) இன் இசை முரசம் கேட்டே - இனிய இசையினை உடைய விழாமுரசின்
முழக்கத்தைக் கேட்ட துணையானே, பெரிது இனிய மெய் கேட்டாம் - யாம் மிக்க இனிமை
பயப்பதொரு மெய்ப் பொருளைக் கேட்டோம், நம்மிறைவன் - நம் மன்னனாகிய பயாபதி
வேந்தன், நங்கள் வாழ்நாள் மன்னிய வாழ்க - தன் வாழ்நாள்களோடு எம்முடையவாக
நிலை பெற்ற வாழ்நாள்களையும் ஒருங்கே தன்னுடையனவாகப் பெற்று வாழ்வானாக,
என்னா - என்று, பொன்இயல் மலரும் - பொன்னிறமமைந்த மலர்களும், சாந்தும் -
நறுமணக் குழம்புகளும், சுண்ணமும் - நறுமணப் பொடிகளும், புகையும் - நறுமணப்
புகைகளும், பொங்க - மிக்குக் கமழா நிற்ப, துன்னிய நகரமாந்தர் - குழீஇய போதன
நகரத்து மக்கள், துறக்கம் பெற்றவர்கள் ஒத்தார் - சுவர்க்க நாட்டை இவ்வுடலோடு
எய்தியவர்களை ஒத்து மகிழ்ந்தனர், (எ - று.)

     “யான் வாழும் நாளும் பண்ணன் வாழியÓ என்னும் வாக்கை ஈண்டு ஒப்பு நோக்குக.
நகர மாந்தர் விழா முரசங்கேட்டு மெய் பெரிது இனிய கேட்டாம் என்று வாழ்க என்னாப்
பொங்கத் துறக்கம் பெற்றவர்கள் ஒத்தார் என்க.

(739)