(இ - ள்.) பேர் ஒளிப் பீதக வுடையர் - மிக்க ஒளியை உடைய பொன்னாடையை உடுத்தியவராய், பைம்பொனால் ஆர் ஒளி தழுவிய பூப்பலி - பசிய பொன் ஒளியாலே தழுவப்பட்ட மலராற் செய்தற்குரிய பூப்பலியை, போர் ஒளி யானைமேல் - போரிடத்தே புகழுடைய யானையின் பிடரின்மேல், நிரைத்துப் போந்தனர் - நிரலாக வைத்துக்கொண்டு வருவாராயினர், வாரணி வனமுலை அவரொடு என்பவே - கச்சணிந்த அழகிய முலைகளையுடைய தம் மகளிர்களுடனே, என்று கூறுவர் சான்றோர், (எ - று.)மேலும் அவ்வணிகர்கள், பொன்னாடையுடுத்துப், பொன்மலர்ப் பலி ஏந்தி, யானைமேல் நிரைத்துத், தம் மகளிருடனே போந்தனர் என்க |