மருதம் | 19. | நாற விண்டன நெய்தலு நாண்மதுச் சேறு விண்டசெந் தாமரைக் கானமும் ஏறி வண்டின 1மூன்றவி ழிந்ததேன் ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம். | (இ - ள்.) ஒருபால் எலாம் - அந்நாட்டின் ஒரு பக்கமாகிய மருத நிலத்து இடம் எங்கும்; நாறவிண்டன நெய்தலும் - மணம் வெளிப்படும் படியாக மலர்ந்த கருநெய்தல் மலர்களிலும்; சேறுவிண்ட நாள்மது செந்தா மரைக் கானமும் - சேற்றிலே உண்டான நாட்காலத்தே தேன் ஒழுக மலர்ந்த செந்தாமரைப் பூக்களின் கூட்டத்திடத்தும்; வண்டு இனம் ஏறி ஊன்ற - வண்டுகளின் கூட்டம் மேலே ஏறித் தம் கால்களை ஊன்றுதலால்; இழிந்த தேன் ஊறி வந்து ஒழுகும் - சுரந்ததேன் ஊற்றெடுத்து வந்து வழிதலைச் செய்யும் (எ - று.) மருதநிலத்தின் இடங்களில் பலவகை மலர்களும் வெளிப்படுத்திய தேன், ஊற்றெடுத்து ஒழுகிக்கொண்டிருக்கின்றனவென்க. நெய்தல்-நெய்தல் நிலத்திற்குரிய பூ; மருதநிலத்தில் நெய்தற் பூவைக் கூறியது “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாராவாயினும், வந்த நிலத்தின் பயத்தவாகும்“ என்னும் புறனடைச் சூத்திரம் பற்றி என்றோ; அன்றி அந்நாட்டில் நால்வகை நிலங்களும் நெருங்கியுள்ளன வெனத் திணைமயக்கம் உணர்த்துதற் பொருட்டோ கூறினாரெனக் கொள்ளலாம். சேறுவிண்ட செந்தாமரை;; நாள் செந்தாமரை; மதுச்செந்தாமரை எனத் தனித்தனி கூட்டுக. “விழுந்த அஞ்சிறை வண்டினம்மிதிப்ப மெல்லரும்பு கிழிந்து வார்தருதேறலும்,“ என்றார். நைடதத்தினும். | ( 19 ) | | |
|
|