பயாபதி மன்னன் ஒரு பொன்மண்டபம் எய்துதல

வேறு

1913. என்றுநன் கேத்தி யிறைஞ்சி யிறைவனைச்
சென்றுயர் சேவடிச் சேடந் தலைவைத்து
வென்றவன் கோயில் வலங்கொண்டு 1மீண்டுமொர்
பொன்றவழ் வேதிகை மண்டபம் புக்கான்.
 
     (இ - ள்.) என்று - என்றிவ்வாறு, இறைவனை - அருகக் கடவுளை, இறைஞ்சி -
வணங்கி, நன்கு ஏத்தி - நன்றாகப் புகழ்ந்து, சென்று - அண்மையிலே சென்று, உயர்
சேவடிச்சேடம் தலைவைத்து - உயரிய திருவடிச் சேடமாகிய நிர்மாலியத்தைத் தன்
தலையிலே சூட்டிக்கொண்டு, வென்றவன் கோயில் வலங்கொண்டு - வினைகளை
வென்றவனாகிய அவ்வருவகக் கடவுளின் திருக்கோயிலை வலம் வந்து, மீண்டும் -
மீளவும், ஓர் பொன்றவழ் வேதிகை - ஓர் அழகு தவழ்கின்ற மேடையையுடைய, மண்டபம்
புக்கான் - மண்டபத்தின் கண்ணே புகுந்தான், (எ - று.)

     பயாபதி மன்னன், இறைவனை இறைஞ்சிச் சேடந் தலைவைத்துக் கோயில்
வலங்கொண்டு, மீண்டும் ஒரு பொன் மண்டபம் புக்கான் என்க.

(803)