அறங்கூறி எம்மை உய்யக்கொண்மின் என அமைச்சர் வேண்டல் | 1916. | வணங்கி மணிமுடி மன்ன னிருப்ப மணங்கமழ் கண்ணியர் மந்திர மாந்தர் அணங்கு மறவமிர் தூட்டி யடிகள் பிணங்கும் பிறவிகள் 1பேர்த்துய்யமி னென்றார். | (இ - ள்.) மணிமுடி மன்னன் வணங்கி இருப்ப - இவ்வாறு மணிகள் அழுத்திய முடியையுடைய பயாபதி மன்னன் அத்துறவியை வணங்கி இருந்தானாக, மணங்கமழ் கண்ணியர் - நறுமணங்கமழும் முடிமாலையையுடைய, மந்திரமாந்தர் - ஆராய்ச்சிவல்ல அமைச்சர், அடிகள் - அடிகளே, அற அமிர்து ஊட்டி- அறவுரைகளாகிய அமிழ்தத்தை உண்ணத் தந்து, பிணங்கும் அணங்கும் பிறவிகள் - மாறுபடுமியல்பினவாய் வருத்துகின்ற பிறவிகளாய பிணிகளை, பேர்த்து - மாற்றி, உய்மின் - எம்மை உய்யக்கொண்டருள்க, என்றார் - என்று வேண்டினார், (எ - று.) உய்மின் - உய்யக் கொண்மின். அமைச்சர்கள் அரசனின் குறிப்பறிந்து அடிகளே பிணங்கும் பிறவிகள் பேர்த்துய்மின் என்றாரென்க. அணங்கும் அறவமிர்து என்றே கொண்டு - அழகிய அற வமிர்தெனக் கொள்ளின், உம்: இசை நிறை எனக்கொள்க. | (806) | | |
|
|