நும் மன்னனை அறங் கேளாது என்னை வினவியதென் னெனல் | 1917. | 2வன்ன மணிமுடி மன்ன 3னிருந்திட இன்னியற் செல்வ 4மெனைப்பல வெய்திய மன்ன னறியுந் திருவற மாண்பினை என்னை வினவிய தென்னைகொ லென்றான். | (இ - ள்.) வன்ன மணிமுடி மன்னன் இருந்திட - நிறமமைந்த மணிகளானியன்ற முடியையுடைய பயாபதி வேந்தன் நும்பால் உளனாக, இன்னியல் செல்வம் எனைப்பல எய்திய - இனிய இயல்பினையுடைய செல்வங்கள் எத்துணையும் பலவாயவற்றைப் பெற்றுள்ள, மன்னன் அறியும் திரு அறம் - அம் மன்னனாலே அறியப்பட்டுள்ள சிறந்த அறவுரையின், மாண்பினை - பெருமைகளை, என்னை வினவியது என்னைகொல் என்றான் - என்னைக் கூறும்படி வேண்டிக் கோடற்குக் காரணம் யாது, என்று முனிவன் வினவினான், கொல்: அசை, (எ - று.) மணிமுடி மன்னன் திருவறம் உயர்ந்தோன் நும்பாலிருக்க அவன் பால் வினவி அறிந்து கொள்ளாமல் என்னை வினவியதன் காரணம் என்னை என்றான் என்க. | (807) | | |
|
|