1919.

மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
அந்தரம் வாழு மமரர் வழிபடும்
தந்திர1 ஞ் சான்ற தவத்திற் கரசனும்
இந்திர னன்னாற் கெடுத்துரைக் கின்றான்.
     (இ - ள்.) மந்திர மாந்தர் மொழிதலும் - அமைச்சர்கள் இவ்வாறு கூறிய உடனே,
வான் இடை அந்தரம் வாழும் அமரர் வழிபடும் - விசும்பினிடையே உள்ள அந்தர உலகில்
வாழ்கின்ற தேவர்களும் வணங்கும், தந்திரம் சான்ற தவத்திற்கு அரசனும் -
நூலறிவானிரம்பிய தவத்திற்கு அரசனாகிய அம்முனிவனும், இந்திரன் அன்னாற்கு எடுத்து
உரைக்கின்றான் - தேவேந்திரனை ஒத்த சிறப்புடைய பயாபதி மன்னனுக்கு அறவுரைகளை
எடுத்துக் கூறுவானாயினான், (எ- று.)

     தந்திரம் - நூல். இந்திரன் அன்னான்: பயாபதி. அத்துறவி பயாபதிக்கு, திருவறம்
எடுத்துக் கூறுகின்றான் என்க.

(809)