1920. கதியுங் கதியினுட் டுப்புமத் துப்பின்
விதிசெய் வினையும் வினைவெல் வகையு
மதியவர் காமுறும் வீட்டது மாண்பும்
அதிபதி கேளென் றருந்தவன் சொன்னான்.
 
     (இ - ள்.) கதியும் - உயிர்கள் செல்லும் பிறப்பும், அக்கதியினுள் - அப்பிறப்பினுள்,
துப்பும் - நிகழும் நுகர்ச்சியும், அத்துப்பின் விதி செய்வினையும் - அந்நுகர்ச்சியை
ஒழுங்குபடுத்துகின்ற வினைகளின் தன்மையும், அவ்வினை வெல்வகையும் -
அவ்வினைகளை வென்றொழிக்கும் உபாயமும், மதியவர் காமுறும் வீட்டது மாண்பும் -
மெய்யறிஞரால் விரும்பப்படுகின்ற முத்தியின் மாட்சிமையும், அதிபதி - அரசனே,
கேள் - யாம் கூறக்கேட்பாய், என்று அருந்தவன் சொன்னான் - என்று அரிய தவமிக்க
அத்துறவி கூறினான், (எ - று.)

     கதியும் துப்பும் வினையும் வினைவெல்வகையும் வீட்டது மாண்பும் கேள் என்று
அருந்தவன் கூறினன் என்க.

(810)